IPL - கிரிக்கெட் போட்டியில் புனே வாரியர்ஸ் அணியில் வங்கப்புலி கங்குலி
GANGULY - I'AM BACK
IPL - SEASON 4 போட்டிகள் ஏப்ரல் மாதம் 8 ஆம் தேதி தொடங்கியது. இந்த போட்டிகளுக்கான ஏலம் நடைபெற்ற போது இந்திய அணியின் முன்னால் கேப்டன் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முன்னால் கேப்டன் சவுரவ் கங்குலியை எந்த அணியினரும் எடுக்க முன் வரவில்லை.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் மற்றொரு வீரர் கிறிஸ் கெயிலையும் எந்த அணியும் வாங்கவில்லை. ஆனால்அவர் சில நாட்களுக்கு முன்னர் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியால் வாங்கப்பட்டு அந்த அணியில் சேர்ந்த உடன் விளையாடிய முதல் போட்டியிலேயே (கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில், 102 ரன்கள்) அதிரடியாக ஆடி சதம் அடித்து அணியை வெற்றி பெற செய்தார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் மற்றொரு வீரர் கிறிஸ் கெயிலையும் எந்த அணியும் வாங்கவில்லை. ஆனால்அவர் சில நாட்களுக்கு முன்னர் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியால் வாங்கப்பட்டு அந்த அணியில் சேர்ந்த உடன் விளையாடிய முதல் போட்டியிலேயே (கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில், 102 ரன்கள்) அதிரடியாக ஆடி சதம் அடித்து அணியை வெற்றி பெற செய்தார்.
சவுரவ் கங்குலி தற்போது சஹாரா புனே வாரியர்ஸ் இந்தியன் அணிக்காக வாங்கப்பட்டு உள்ளார். மும்பைக்கு எதிராக 4/5/11 அன்று நடைபெற்ற ஆட்டத்தில் கங்குலி விளையாடுவர் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த போட்டியில் அவர் விளையாடவில்லை. இந்த போட்டியில் புனே அணி தோல்வியை சந்தித்தது.
சஹாரா புனே வாரியர்ஸ் இந்தியன் வீரர் ஆசிஷ் நெஹ்ரா காயம் அடைந்து உள்ளதால் அவருக்கு பதில் கங்குலி அணியில் சேர்க்கப்பட்டு
உள்ளார். கங்குலிக்கு ஜனவரி மாதம் நடைபெற்ற ஏலத்தின் போது நிர்ணயிக்கப்பட அடிப்படை விலையான (Base Price) $400,000 (இந்திய ரூபாயின் மதிப்பு :ரூபாய் 1,78,39,869/-) என்ற அதே விலைக்கே வாங்கப்பட்டு உள்ளார்.
கங்குலி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் சேர்க்காதது அவரது ரசிகர்களுக்கு வருத்தமாக இருந்தாலும் தற்போது அவர் சஹாரா புனே வாரியர்ஸ் இந்தியன் அணியில் சேர்க்கபட்டு உள்ளதால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
வங்கப்புலி கங்குலி IPL-இல் அதிரடியாக விளையாடி ரசிகர்களை உற்சாகப்படுத்துவாரா???
No comments:
Post a Comment