ரயில்வே பட்ஜெட் 2011
இன்று பாராளுமன்றத்தில் 2011-2012ஆம் ஆண்டிற்கான ரயில்வே பட்ஜெட்டை மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி தாக்கல் செய்தார். எதிர் கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கு இடையே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. எதிர் கட்சிகளின் எதிர்ப்புக்கு காரணம் பட்ஜெட்டில் பெரும்பாலான திட்டங்களும் சலுகைகளும் மேற்கு வங்க மாநிலத்தை மையமாக கொண்டே இருந்ததே ஆகும். இருப்பினும் இந்த பட்ஜெட்டில் நல்ல திட்டங்களும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதன் முழு விவரம்:
கடந்த ஆண்டு வருமானம் மற்றும் நடப்பு ஆண்டிற்கான ஒதுக்கீடு:
2010-2011 ஆம் ஆண்டில் ரயில்வே வருவாய் : 1 லட்சம் கோடிக்கு மேலாக
2011-2012 ஆம் ஆண்டு ரயில்வே திட்ட ஒதுக்கீடு : 57,630 கோடிகள்
புதிய தொடக்கம்
- நந்தி கிராமில் ரயில்வே தொழில் நுட்ப பூங்கா
- கொல்கத்தாவில் மெட்ரோ ரயில் பெட்டி தொழிற்சாலை
- மணிப்பூரில் டீசல் ரயில் எஞ்சின் தொழிற்சாலை
- ஜம்மு காஷ்மீரில் ரயில் தொழிற்சாலை
- ரேபரேலியில் ரயில் பெட்டி தொழிற்சாலை
- மகாராஷ்டிராவில் காஸ் பவர் பிளான்ட் (700MW)
- கேரளாவின் பாலக்காட்டில் ரயில் பெட்டி தொழிற்சாலை
- டார்ஜிலிங்கில் ரயில்வே துறையின் சிறப்பு மென்பொருள் பூங்கா
- அசாமின் பொங்கை காவ்னில் ரயில்வே பூங்கா
- கேரளாவில் இரண்டு இடத்தில ரயில்வே புறப்பாடு நிலையம்
- ரயில்வே சார்பில் ஐந்து பாலிடெக்னிக் கல்லூரிகள் தொடங்கப்படும்.
- 442 புதிய ரயில் நிலையங்கள்அமைக்கப்படும்.
புதிய ரயில்கள்
- 200 புதிய ரயில்கள்
- கூடுதலாக மூன்று சதாப்தி ரயில்கள்
1)புனே-செகந்திராபாத்
- புதிதாக ஆறு துரந்தோ ரயில்கள் (Point-Pointl;இடையில் எங்கும் நிற்காத துரந்தோ ரயில்)
1) அலஹாபாத்-மும்பை
2) புனே-அலஹாபாத்
3) சீல்டாஹ்- பூரி
4)மும்பை சென்ட்ரல்- டெல்லி
தமிழ்நாட்டுக்கு இரண்டு துரந்தோ ரயில்கள்
5) சென்னை - மதுரை
6) சென்னை - திருவனந்தபுரம்
- சென்னை கடற்கரையில் இருந்து கும்மிடிப்பூண்டி, ஆவடி, செங்கல்பட்டு, திருவள்ளூருக்கு கூடுதல் மின்சார ரயில் சேவை
- கோவை - மேட்டுபாளையம் இடையே புதிய ரயில்
- மைசூர் - சென்னை இடையில் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை
- கன்னியாகுமரியில் இருந்து திப்ரூகாருக்கு ரயில் சேவை (திருவனந்தபுரம் வழியாக)
- சென்னையில் இருந்து ஷீரடிக்கு பெங்களூரு வழியாக புதிய ரயில்
- கோயமுத்தூர் - தூத்துக்குடி இடையே புதிய ரயில்
- வாஸ்கோவில் இருந்து வேளாங்கன்னிக்கு புதிய ரயில்
- புருலியாவில் இருந்து விழுப்புரத்திற்கு புதிய ரயில்
- தர்மபுரியில் இருந்து பெங்களூருக்கு புதிய ரயில்
- கொல்லம்-நாகர்கோவில் புதிய ரயில்
- சென்னையில் இருந்து காரைக்காலுக்கு புதிய ரயில்
- நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் புதியரயில்
- மும்பைக்கு புதிதாக 47ரயில்கள்
- டெல்லி - புதுச்சேரி புதிய ரயில்
- ராஜ்துரானி என்ற புதிய ரயில் சேவை
- மும்பை- அகமதாபாத் இடையில் டபுள்டக்கர் ரயில் சேவை
- ஜெய்பூர் - டெல்லி இடையில் டபுள்டக்கர் ரயில்சேவை
- காரக்பூரில் இருந்து விழுப்புரத்திற்கு ரயில் சேவை (வேலூர் வழியாக)
பிற சலுகைகள்
- குளிர்சாதன மற்றும் சாதாரண ரயில் முன்பதிவு கட்டணம் 50% குறைப்பு
- மூத்த குடிமக்களுக்கான வயது வரம்பு 60 இல் இருந்து 58 ஆக குறைப்பு - மேலும் மூத்த குடிமக்களுக்கான கட்டணச் சலுகை 30% சதவீதத்தில் இருந்து 40% ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.
- முதல் முறையாக 16000 முன்னாள் ராணுவ வீரர்களுக்கு ரயில்வேயில் வேலை
- ரயில்வேயில் காலியாக உள்ள சுமார் 1.75 லட்சம் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்.
- ரயில் விபத்து நடைபெறாமல் சிறப்பாக செயல்படும் முதல் இரண்டு மாநிலங்களுக்கு 2 சிறப்பு ரயில்கள்
- ரயில் விபத்துக்களை தடுக்க ரயில் என்ஜினில் விபத்து தடுக்கும் கருவிகள்பொருத்தப்படும்.
- 584 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படும்.
- புதிய ரயில் பாதைக்கு ரூ. 9,853 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
- 700 கிலோ மீட்டார் தூரத்திற்கு புதிய ரயில்பாதை
- தூத்துக்குடி - கோவை இடையே புதிய ரயில் இணைப்பு சேவை
- 10 ஆயிரம் பேர் தங்கும் வகையில் சிலிகுரியில் குடியிருப்புகள் அமைக்கப்படும்.
- ஒரிசாவில் சரக்குப்பெட்டி தயாரிக்கும் ஆலை விரைவில் உற்பத்தியை தொடங்கும்.
- ரயில் நிலையங்களில் பொருட்களை கொண்டு செல்ல டிராலி அறிமுகம்செய்யப்படும்
- பெரம்பூர் ஐசிஎப் ஆலையில் 2வது உற்பத்தி பிரிவு விரைவில் செயல்படத் துவங்கும்.
- மாற்று திறனாளிகள் ரயில் நிலையங்களுக்கு சிரமம் இன்றி வர ஏற்பாடு
- ஆளில்லா ரயில்வே கேட்டில் ஊழியர்கள் நியமனம்
- சரக்கு ரயிலுக்கு தனி பாதை - 12 ஆயிரம் ஏக்கர் இதற்காகஒதுக்கப்படும்.
- ரயில்வே ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு.
- விளையாட்டு வீரர்களுக்கு பணியில் முன் உரிமை
- ரயில்வேயின் வருமானத்தை அதிகரிக்க பத்தாயிரம் ரூபாய்க்கு கடன்பத்திரம்
No comments:
Post a Comment