பட்ஜெட் 2011-2012
கடந்த திங்கட் கிழமை அன்று (28/02/2011) காலை 11.00 மணி அளவில் பாராளுமன்றத்தில் பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் திரு. பிரணாப் முகர்ஜி அவர்கள் தாக்கல் செய்தார்.
இந்த பட்ஜெட்டில் சிலதுறைகளுக்கு கடந்த ஆண்டை விட அதிக நிதியும், சில துறைகளுக்கு கடந்த ஆண்டை விட குறைந்த அளவு நிதியும் ஒதுக்கப்பட்டு உள்ளது.
தனி வருமான வரி வரம்பு ரூ. 1,80000/- ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. ( கடந்த ஆண்டை விட 20000/- ரூபாய் அதிகம் )
பட்ஜெட் விவரம்::
வரவு மற்றும் செலவு
- நடப்பு நிதியாண்டில் மொத்த செலவு மதிப்பீடு 12 லட்சத்து 57 ஆயிரத்து 729 கோடி ரூபாய்.
- வரிகள் மூலம் மொத்த வருவாய் 9.3 லட்சம் கோடி ரூபாய்.
- புதிய சேவை வரி மூலம் நிகரவருவாய் - 4,000 கோடி ரூபாய்
- வரி குறைப்பு மற்றும் சலுகை மூலம் வருவாய் இழப்பு - 200 கோடிரூபாய்
- மறைமுக வரி மூலம் நிகர வருவாய்- 11,300 கோடிரூபாய்
- நேரடி வரி விதிப்பு மூலம் வருவாய் இழப்பு- 11,000 கோடிரூபாய்
வளர்ச்சி
- மூன்றாவது காலாண்டில் வளர்ச்சி 8.9%
- 2010-11ல் உள்நாட்டு பொருளாதார வளர்ச்சி 8.6%
- 2011-12 ல் பொருளாதார வளர்ச்சி 9% ஆக இருக்கும்
- 2010-11 ல் விவசாய துறையின் வளர்ச்சி 5.4%
- தொழில்துறை வளர்ச்சி 8.1%
- சேவைத்துறை வளர்ச்சி 9.6%
நிதி ஒதுக்கீடு விவரம்
- ராணுவ நிதி ஒதுக்கீடு 1 லட்சத்து 64 ஆயிரம் கோடி ரூபாய் - கடந்த ஆண்டை விட 11.6% அதிகம்.
- கல்விக்கான நிதி ஒதுக்கீடு 52,057 கோடி ரூபாய் - கல்விக்கான நிதி ஒதுக்கீடு 24 சதவீதம் அதிகரிப்பு
- கைத்தறி நெசவாளர்களுக்கு நபார்டு வங்கிளுக்கு 3 ஆயிரம் கோடி ஒதுக்கீடு ரூபாய்
- மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு 26,760 கோடி ரூபாய் ஒதுக்கீடு
- நீதித்துறை அடிப்படைக் கட்டமைப்பு திட்டங்களுக்கு 1000 கோடி ரூபாய்
- நீதித்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்படும் நிதி 3 மடங்கு உயர்த்தப்பட்டு 3,000 கோடி ரூபாய்
- சி.பி.ஐ க்கு வரும் ஆண்டில் 318 கோடியே 28 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.. கடந்த ஆண்டை விட 9% குறைவு. ( கடந்தஆண்டில் 350 கோடியே 14 லட்சம் ஒதுக்கப்பட்டது..)
- விளையாட்டுத் துறை மற்றும் இளைஞர் நலத்துக்காக 1,121 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.. இதுவும் கடந்த ஆண்டை விடக் குறைவு..
- ( கடந்த ஆண்டில் 3,670 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.)
- ஜனாதிபதி மாளிகையில் பணி புரியும் ஊழியர்கள், வாகன பராமரிப்பு உள்ளிட்ட செலவுக்காக 17 கோடியே 94 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.. இதுவும் கடந்த ஆண்டை விடக் குறைவு..(கடந்த ஆண்டில் 22 கோடியே 61 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது.)
- ஊரக வீட்டு வசதி நிதியத்திற்கான ஒதுக்கீடு 3 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
- மக்கள் நலத் திட்டங்கள் - 1 லட்சத்து 60 ஆயிரத்து 887 கோடி ரூபாய்
- பெண்கள் சுய உதவிக் குழு மேம்பாட்டு நிதியத்தை உருவாக்க தொகுப்பு நிதியாக 500 கோடி ரூபாய்
- சுகாதார திட்டங்கள் -.26,760 கோடி ரூபாய்
- அனைவருக்கும் கல்வித் திட்டத்திற்கு (சர்வ சிக்ஷா அபியான்) 21,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு
- சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு 2,760கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
2011-2012 ஆம் ஆண்டிற்கான தனி நபர் வருமான வரி
பிரிவு | ஆண்டு வருமானம் (ரூபாயில) | வரி சதவீதம் |
1,80,0000 வரை | வரி இல்லை | |
1,80,001 முதல் 5,00,000 வரை | 10% | |
5,00,001 முதல் 8,00,000 வரை | 20% | |
8,00,000 க்கு மேல் | 30% | |
பெண்கள் | 1,90,0000 வரை | வரி இல்லை |
1,90,001 முதல் 5,00,000 வரை | 10% | |
5,00,001 to 8,00,000 வரை | 20% | |
8,00,000 க்கு மேல் | 30% | |
மூத்த குடிமக்கள் ( வயது வரம்பு - 60 வயது முதல் 80 வயதுக்குள் ) | 2,50,000 வரை | வரி இல்லை |
2,50,001 முதல் 5,00,000 வரை | 10% | |
5,00,001 முதல் 8,00,000 வரை | 20% | |
8,00,000 க்கு மேல் | 30% | |
மூத்த குடிமக்கள் ( வயது வரம்பு - 80 வயதுக்கு மேற்பட்டோர் ) | 5,00,000 வரை | வரி இல்லை |
5,00,001 முதல் 8,00,000 வரை | 20% | |
8,00,000 க்கு மேல் | 30% |
வரி மாற்றம்
- சேவை வரி 10% என்பதில் மாற்றம் இல்லை
- மத்திய வரி விதிப்பு விகிதம் 10% என்பதில் மாற்றம் இல்லை
- சென்வாட் வரிவிதிப்பில் மாற்றம் இல்லை
- விவசாய இயந்திரங்கள் மீதான சுங்கவரி 5% இல் இருந்து 4.5% ஆக குறைக்கப்பட்டு உள்ளது.
விவசாயம்
- விவசாயிகளுக்கு கடன் இலக்கு ரூ.3.75 லட்சம் கோடியில் இருந்து ரூ.4.75 லட்சம் கோடி
- தானியங்கள் உற்பத்தி -ரூ.300 கோடி
- காய்கறி பயிரிடுதல் -ரூ.300 கோடி
- நாடு முழுவதும் 15 பெரும் உணவுப் பூங்கா அமைக்கப்படும்
- நாடு முழுவதும் 24 குளிர்சாதன சேமிப்புக் கிடங்குகள்
- யூரியாவுக்கு புதிய உரக்கொள்கை ஏற்படுத்துவது குறித்து பரிசீலனை செய்யப்படும்
- உரங்கள் எளிதாகக் கிடைக்கும் வகையில் உரக்கொள்கை மாற்றியமைக்கப்படும்.
- உணவுப் பொருள் வீணாவதைத் தடுக்க பதப்படுத்துதல் திட்டம் ஊக்குவிக்கப்படும்.
- வேளாண்பொருட்களை சேமித்து வைக்க கிராமங்களில் கிடங்கு வசதி
- கடன்களை உரிய காலத்தில் செலுத்தும் விவசாயிகளுக்கு 3 சதவீத வட்டி மானியம்
- பயிர்க் கடன் வட்டிவீதம் 7 %
- நாட்டின் மேற்கு பகுதியில் பசுமை புரட்சியை அதிகரிக்க கூடுதலாக ரூ.400 கோடி ஒதுக்கீடு
விலை குறையும் பொருட்கள்
சில பொருட்களுக்கான சேவை வரி குறைக்கப்பட்டு உள்ளதால் பின்வரும் பொருட்களின் விலை குறையும்.
- மொபைல் போன்
- கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள்
- சலவை சோப்
- இறக்குமதி நூல்
- பிரின்டர்
- மின் உற்பத்தி நிலைய உதிரி பாகங்கள்
- பிரின்ட்டிங் பிரஸ் சாதனங்கள்
- சினிமா பிலிம்
- ஆம்புலன்ஸ்
- அகர்பத்தி
- சானிடரி நாப்கின்
- ஸ்டெயின்லஸ் ஸ்டீல்
- பட்டு
- இரும்புத் தாது
- ஜிப்சம்
- சிறிய எலெக்ட்ரானிக் சாதனம்
- குளிர்சாதனப்பெட்டி
- விவசாய கருவிகள்
- சூரிய சக்தி சாதனம்
- பேட்டரியில் இயங்கும் வாகனம்
- ஆயுர்வேத மருந்துகள்
- காகிதம்
- சணல்
விலை அதிகரிக்கும் பொருட்கள்
சில பொருட்களுக்கான சேவை வரி அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதனால் இவைகளின் விலை உயரும்.
- நோட்டு-புத்தகம்
- கேக்
- ஓட்டல் சேவைகள்
- A/C ஓட்டல் மதுபான விடுதிகள்
- A/C மருத்துவமனைகள் & மருத்துவ பரிசோதனை மையங்கள்
- சூப், காபி - தேநீர் மிக்ஸ் மற்றும் பாக்கு போன்ற உணவு பொருள்
- பிராண்டட் நகைகள்
- பிராண்டட் ஆடைகள்
- தனியார் மருத்துவமனைகளில் பெறப்படும் சிகிச்சைக்கு 5% சேவை வரி செலுத்த வேண்டும். இதை சிகிச்சை பெறும் தனிப்பட்ட நபரோ, இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அல்லது கம்பெனிகள் செலுத்த வேண்டும்.
- விமான பயண கட்டணம்
விமான பயணம் - சேவை வரி உயர்வு
- உள்ளூர் விமான பயணத்திற்கான சேவை வரி 50/- ரூபாய் அதிகரிப்பு
- வெளிநாடுவிமான பயணத்திற்கான சேவை வரி 250/- ரூபாய்அதிகரிப்பு
(உள்ளூர் விமான பயண சேவை வரி - முன்னர் ரூ.100/- தற்போதுரூ.150/-)
(வெளிநாடுவ விமான பயண சேவை வரி - முன்னர் ரூ.500/- தற்போதுரூ.750/-)
வீட்டு கடன் மானியம்
- 15 லட்சம் ரூபாய் வரையிலான வீட்டுக் கடன்களுக்கு, 1% வட்டி மானியம்
தற்போது 10 லட்சம் ரூபாய் வரையிலான வீட்டுக் கடன்களுக்கு 1 சதவீத வட்டி மானியம் அளிக்கப்படுகிறது. 10 லட்சம் முதல் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான வீடுகள் வாங்கினால் மட்டுமே இந்த வட்டி மானியம் கிடைக்கும். சென்னை போன்ற நகரங்களில் இல்லாமல் கிராமப் பகுதிகளில் வீடு வாங்குவோருக்கும் இது பயன் தரும்.
மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு மற்றும் உர மானியம் நேரடியாக மக்களுக்கு
- மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு மற்றும் உரங்களுக்காக வழங்கப்படும் மானியம், வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்களை நேரடியாக சென்று சேரும் வகையில், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் புதிய திட்டம்
ஊதிய உயர்வு
அங்கன்வாடி பணியாளர்களுக்கான ஊதியம் இரண்டு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது
- அங்கன்வாடி பணியாளர் - 1500 ரூபாயில் இருந்து 3000 ரூபாயாக அதிகரிப்பு
- அங்கன்வாடி உதவியாளர் - 750 ரூபாயில் இருந்து 1500 ரூபாயாக அதிகரிப்பு
பிற அம்சங்கள்
- கைத்தறி நெசவாளர்கள் மேம்பாட்டுக்குப் புதிய திட்டம்
- கலால் வரி மற்றும் சுங்க வரிகள் மூலம், அரசுக்கு ரூ.7,300/- கோடி ரூபாய் வருமானம்
- 2012 இல் பங்கு விலக்கல் இலக்கு 40,000 கோடி ரூபாய்
- ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு படிக்கும் SC & ST மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை அதிகரிப்பு
- நிரந்தர ஊனம் அடைந்து பணியில் இருந்து விடுவிக்கப்படும் ராணுவத்தினர் மற்றும் மத்திய துணை ராணுவப்படையினருக்கு இழப்பீட்டுத் தொகையாக 9 லட்சம் ரூபாய் தரப்படும்.
- சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜிவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையத்திற்கு, 20 கோடி ரூபாயும், மெட்ராஸ் ஸ்கூல் ஆப் காமர்ஸ் நிறுவனத்திற்கு, 10 கோடி ரூபாயும் ஒதுக்கப்படும்.
- 80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான முதியோர் ஓய்வூதியம் 200 ரூபாயில் இருந்து 500 ரூபாயாக உயர்த்தப்படுகிறது.
- புதிய ரூபாய் குறியீட்டுடன் நாணயங்கள் வெளியிடப்படும்
No comments:
Post a Comment