BLOG QUOTE

விடியும் என்று விண்ணை நம்பும் நீ முடியும் என்று உன்னை நம்பு!

தோல்வி உன்னை தோற்கடிக்கும் முன் நீ தோல்வியைத் தோற்கடித்து விடு ....

QUOTE 1

உழைப்பு என்பது ஒரு கோப்பை பால் போன்றது..
அதிர்ஷ்டம் என்பது ஒரு கரண்டி சர்க்கரை போன்றது..

Tuesday, November 23, 2010

TAMIL PROVERB

தமிழ் பழமொழிகளும் விளக்கமும்:

"கல்லைக் கண்டால் நாயைக் காணோம்! நாயைக் கண்டால் கல்லைக் காணோம்!"

அறிந்தது: நாயை பார்த்தால் கையில் கல் இல்லை அதே, கையில் கல் இருந்தால் நாயைக் காணோம்!

அறியாதது: "கல்லைக் கண்டால் நாயகனைக் காணோம்,நாயகனைக் கண்டால் கல்லைக் காணோம்". என்பது தான் உண்மையான பழமொழி. இங்கு நாயகன் என்பது கடவுள்.இதன் பொருள் கல்லால் ஆன ஒரு இறைவன் சிலையை பார்க்கும் போது, அதை கல்லாக பார்த்தால் அங்கே கடவுள் இல்லை, கடவுளாக பார்த்தால் கல் இல்லை.

"வர வர மாமியார் கழுதை போல் ஆனாள்!"

அறிந்தது:வர வர மாமியார் கழுதை போல ஆனார்.

அறியாதது: இந்த பழமொழியில் கயிதை என்பது காலப்போக்கில் மாறி கழுதை என்று ஆகி விட்டது. கயிதை என்றால் ஊமத்தம் பூச்செடியில் உள்ள காய்.(ஊமத்தங்காய்). இதில் ஊமத்தம்பூ பூத்து நாளடைவில் விஷத் தன்மை கொண்டதாக அதாவது ஊமத்தங்காய் ஆக மாறுவதையே அப்படி சொல்கிறோம்.

"ஆறிலும் சாவு நூறிலும் சாவு"

அறிந்தது: ஆறு வயதிலும் சாவு நூறு வயதிலும் சாவு.

அறியாதது: மகாபாரதத்தில் குந்தி தேவி கர்ணனை பஞ்ச பாண்டவர்கள் மற்றும் கிருஷ்ணனுடன் சேர்ந்து கொள்ளுமாறு வேண்டினாள். அதற்கு கர்ணன் பஞ்ச பாண்டவர்கள் மற்றும் கிருஷ்ணன் (5+1=6 பேர்) ஆறு பேருடன் அல்லது கௌரவர்கள் (100 பேர்கள்) நூறு பேருடன் இருந்தாலும் சரி மரணம் என்பது உறுதி என்றான்.

"களவும் கற்று மற"

அறிந்தது: திருடுவதை கற்று கொண்டு பின்னர் மறந்து விட வேண்டும்.

அறியாதது: இந்த பழமொழியில் "கற்று" என்பது "கத்து" என்று வர வேண்டும். கத்து என்றால் பொய் என்று அர்த்தம். களவு என்றால் திருட்டு. திருட்டையும் பொய்யையும் மறக்க வேண்டும்.

"ஆயிரம் பேரை கொன்றால் அரை வைத்தியன்".

அறிந்தது: ஆயிரம் பேரை கொன்றால்தான் அவன் அரை வைத்தியன் ஆகின்றான்.

அறியாதது: இதில் "வேரை" என்பது பேச்சு வழக்கில் "பேரை" என்றும் "கண்டால்" என்பது "கொன்றால்" (ஆயிரம் வேரை கண்டால் அரை வைத்தியன்) என்றும் ஆகி விட்டது. ஆயிரம் வேரை கண்டால் அரை வைத்தியன் என்று பொருள் (வேர் என்பது மூலிகை செடிகளின் வேரைக் குறிக்கும் - உதாரணம்: கீழாநெல்லிச் செடியின் வேர்)


"ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம் செய்யலாம்"


அறிந்தது: ஒரு கல்யாணத்தை நடத்த ஆயிரம் பொய்களை சொல்லலாம்.

அறியாதது: திருமணத்தின் போது ஆயிரம் முறையாவது போய் (சென்று) சொல்லி புரிய வைத்து திருமணத்தை நடத்த வேண்டும். 'போய்' என்பது பேச்சு வழக்கில் 'பொய்' என்று மாறி விட்டது.

அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள்.

அறிந்தது: அடித்தால்தான் காரியம் நடக்கும்.

அறியாதது: இதில் அடி என்பது இறைவனின் அடி ஆகும். இறைவனின் அடி நமக்கு உதவுவது போல வேறு யாரும் உதவ மாட்டார்கள்.

பந்திக்கு முந்து..படைக்கு பிந்து...

அறிந்தது : விருந்தில் பந்திக்கு முதலில் செல்ல வேண்டும். சண்டை என்றால் பின் வாங்க வேண்டும்.

அறியாதது: உண்ணும் பொழுது கை முன் செல்கிறது. அதே போரில் சண்டையிடும் போது முதுகில் உள்ள ஆயுதங்களை எடுக்க கை பின்னால் செல்கிறது. இதுவே அர்த்தம்.

இதுதான் பழமொழிகளின் உண்மையான அர்த்தம். ஆனால் நாம் காலப்போக்கில் நமது வசதிக்கு ஏற்றவாறு மாற்றி விட்டோம். இது போல் இன்னும் பல நல்ல தமிழ் பழமொழிகளுக்கு நாம் தவறான அர்த்தம் கொண்டு உள்ளோம். நம் பிழைகளை திருத்தி கொண்டு மற்றவர்களுக்கும் தமிழ் பழமொழிகளின் பெருமையை உணர்த்துவோம்.

தமிழ் வாழ்க!!!தமிழர் வாழ்க!!!

Friday, November 19, 2010

ABOUT SPECTRUM

ஸ்பெக்ட்ரம் ஒரு பார்வை:

ஸ்பெக்ட்ரம் பற்றி அறிந்து கொள்வோமா?


இன்று செய்திதாள்கள்,வானொலிகள்,தொலைக்காட்சி பெட்டிகள், இணைய தளங்கள் என அனைத்து ஊடகங்களிலும் ஸ்பெக்ட்ரம் பற்றித்தான் அதிகம் பேசப்படுகிறது. இந்த ஸ்பெக்ட்ரம் என்றால் என்ன? இதனால் என்ன பயன்?

முதலில் Spectrum என்றால் தமிழில் என்ன அர்த்தம்? Spectrum என்றால் "அலைக்கற்றை" என்று பொருள். இதற்கு நிறமாலை என்ற வேறு ஒரு அர்த்தமும் உண்டு.

நிறமாலை என்பது நம் கண்களுக்கு தெரியும் ஒளியலைகள் மட்டும் இன்றி அனைத்து அலைநீளங்களையும் கொண்ட மின்காந்த அலைவரிசையைக் குறிக்கும்.

ஒரு முப்பட்டகத்தின் வழியாகப் பாயும் வெண்மை நிற ஒளி எவ்வாறு நிறப்பிரிகை அடைகிறது என்பதை கீழே உள்ள படம் மூலம் அறிந்து கொள்ளுங்கள். ஒளி கண்ணாடியின் வழியே செல்லும் பொழுது வெவ்வேறு அலைநீள ஒளியலைகள் வெவ்வேறு அளவு விலகுகின்றன. குறைந்த அலைநீளம் கொண்ட, ஆனால் அதிக ஆற்றலுடைய ஊதா நிறம் அதிகம் விலகல் அடைகிறது. அதே நேரம் குறைந்த அலை நீலம் கொண்ட சிகப்பு நிறம் குறைவாக விலகல் அடைகிறது.





மின்சாரம் மூலம் வரும் மின்புலம் (Electric Field) மற்றும் காந்தம் மூலம் வரும் காந்தப்புலம் (Magnetic Field) இவற்றை இணைத்து ஜேம்ஸ் கிளார்க் மேக்ஸ்வெல் என்ற விஞ்ஞானி மின்காந்தப் புலம் (Electromagnetic Field) என்பதை கண்டறிந்தார். மேலும் இதில் மின்காந்த அலைகள் உள்ளன என்பதையும் அவர் கண்டறிந்தார்.

நம் கண்ணில் படும் பல்வேறு நிறங்களைக் கொண்ட ஒளி அலைகள் அனைத்துமே மின்காந்த அலைகள் ஆகும். சூரிய ஒளி (வெள்ளை), ஒரு முப்பட்டகம் வழியாகச் செலுத்தப்படும்போது 7 வெவ்வேறு வண்ணங்களாகப் பிரியும்.இந்த ஏழு வண்ணங்களே வானவில்லில் காணப்படும். இந்த ஒவ்வொரு வண்ண ஒளி அலையும் மின்காந்த அலைதான். இவை அனைத்தும் ஒன்றாகச் சேரும்போது வண்ணங்கள் மறைந்து, வெளிர் ஒளி (வெண்மை நிறம்) தென்படுகிறது.

மருத்துவத் துறையில் பயன்படும் X -கதிர்கள், பாக்டீரியா போன்ற கிருமிகளை அழிக்க உதவும் புற ஊதாக் கதிர்கள், மருத்துவத் துறையில் முடநீக்கு சிகிச்சையில் உதவும் அகச் சிவப்புக் கதிர், மைக்ரோவேவ் சமையற் கலனில் பயன்படுத்தப்படும் மைக்ரோ அலைகள் , வானொலி மற்றும் தொலைக்காட்சி ஒலி மற்றும் ஒளி பரப்ப உதவும் ரேடியோ அலைகள் என இவை அனைத்துமே மின்காந்த அலைகளின் பயன்கள் தான்.மேலும் இவைகளும் ஒருவகை மின்காந்த அலைகளே ஆகும்.

இதில் ஒரு ஒற்றுமை என்னவென்றால் இந்த அலைகள் அனைத்துமே பரவும் வேகம் 3*10^8 m/s. அதாவது இவை அனைத்துமே ஒளியின் வேகத்தில் (i.e., C = 3*10^8 m/s)பயணம் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மின்காந்த அலைகளின் வேகமான C எவ்வாறு கணக்கிடப்படுகிறது? இதன் மதிப்பானது கீழ்க்கண்ட சமன்பாட்டின் மூலம் கணக்கிடப்படுகிறது.

ஒளியின் வேகம் = அலைநீளம் * அதிர்வெண்

எனவே அதிர்வெண் அதிகரித்தால், அதன் அலை நீளம் குறையும். அலை நீளம் அதிகரித்தால் அதிர்வெண் குறைவாக இருக்கும்.

அதிர்வெண் (Frequency) என்பது ஒரு நேர அலகிற்குள் எத்தனை முறை ஒரு சுழற்சி நிகழ்வு நிகழ்கிறது என்பதற்கான அளவையாகும். அதிர்வெண் ஹெர்ட்ஸ்(Hertz) என்ற அலகால் அளகிடப்படுகிறது. பழைய கடிகாரங்களில் உள்ள பெண்டுலம் ஒரு முனையில் இருந்து மறு முனைக்கு ஒரு வினாடியில் எத்தனை முறை செல்கிறது என்பதே அதிர்வெண். ஒரு வினாடிக்கு ஒரு முறை செல்வதாக கொண்டால் அதிர்வெண்ணின் மதிப்பு ஒன்று (1) ஆகும்.

நாம் கண்ணால் காணும் ஒளிக்கதிர்களுக்கு அதிர்வெண் 430 - 750 டெரா ஹெர்ட்ஸ் (Tera Hertz)என்பதற்குள் இருக்கும். இதில் 750 டெரா ஹெர்ட்ஸ் என்பது ஊதா நிற ஒளி. 430 டெரா ஹெர்ட்ஸ் என்பது சிவப்பு நிறம். புற ஊதாக் கதிர்கள் என்றால், 750 டெரா ஹெர்ட்ஸை விட அதிகம் அதிர்வெண் கொண்ட அலைகள். அகச் சிவப்புக் கதிர்கள் என்றால் 430 டெரா ஹெர்ட்ஸை விடக் குறைந்த அதிர்வெண் கொண்ட அலைகள்.

நாம் கேட்கும் வானொலியில் இரண்டு வகை உண்டு. ஒன்று நாம் அனைவரும் அறிந்த FM
(Frequency Modulation) மற்றொன்று AM (Amplitude Modulation).இதில் நமது மின்காந்த அலையான ரேடியோ அலைகள் பயன்படுதப்படுகிறது. இந்த அலைகள் ரேடியோ மற்றும் தொலைக்காட்சி செய்தித் தொடர்புக்குப் பயன்படுகிறது. 530MHz முதல் 1710MHz வரையுள்ள அலைகள் AM வரிசையிலும், 88MHz முதல் 108MHz வரையுள்ள அலைகள் FM வரிசையிலும், தொலைக்காட்சியில் 54MHz முதல் 890MHz வரையிலும், செல்போன்களில் மிக உயர் அதிர்வெண் (Ultra High Frequency-UHF) வரிசையிலும் பயன்படுகின்றன.

இதில் நாம் அனுப்பும் செய்தி,படங்கள் மற்றும் உரையாடல்கள் போன்றவற்றை எடுத்து செல்ல ஒரு கேரியர் தேவை. உதாரணமாக நாம் சைக்கிளில் உள்ள பின் பக்க கேரியரில் ஒரு பொருளை எப்படி வைத்து எடுத்து செல்கிறோமோ அது போல இங்கும் நமது தகவலை கொண்டு செல்ல ஊர்தி அதிர்வெண் பயன்படுகிறது.(i.e.,Career Frequency).

AM வானொலியில் இரு நிலையங்களுக்கு இடையில் (RADIO STATION) குறைந்த பட்சம் 9KHZ-10KHZ இடைவெளி இருக்க வேண்டும்.FM வானொலியில் 0.8MHZ இடைவெளி இருக்க வேண்டும். உதாரணமாக சென்னையில் RADIO CITY (ரேடியோ சிட்டி) நிலையத்தின் அலைவரிசை 91.1 அதற்கு அடுத்த நிலையமான ஆஹா FM (AAHA FM)இன் அலைவரிசை 91.9 (i.e., 91.9MHZ-91.1MHZ=0.8MHZ). இந்த இடைவெளி சரியாக இருந்தால் மட்டுமே நிகழ்சிகள் முறையாகவும் தெளிவாகவும் இருக்கும்.

AM என்பது Medium Wave (Coverage:100 Kilometer-200 Kilometer)
SW (Short Wave) என்பது Short Wave (Large Distances)
FM என்பது குறைந்த தூரம் மட்டுமே செல்லும், ஆனால் துல்லியமாக இருக்கும்.

இப்பொழுது முக்கியமான ஒரு கேள்விக்கு வருவோம். பண்பலை வானொலியின் மொத்த அலைவரிசையின் நீளமே 87.5MHZ-108MHZ வரைதான். இதில் யார் எந்த அலை நீளத்தை பயன்படுத்தி கொள்வது? இந்த அலைவரிசை ஒதுக்கீடு செய்யும் போது மேலே சொன்ன உதாரணம் போல் இடைவெளி 0.8MHZ இருக்க வேண்டும். இந்த அலைவரிசைகளை ஒதுக்கீடு செய்யத்தான் ஏலம் (Auction) விடப்படுகிறது.

இதே போன்று மொபைல் சேவையில் அலைவரிசைகள் 800, 900, 1800,1900MHZ இல் ஏதோ ஒன்றில் இயங்கும். பல்வேறு நாடுகளில் வெவ்வேறு அதிர்வெண்ணில் இருக்கும். இந்தியாவில் 900, 1800 என்ற இரண்டு அதிர்வெண்களில் மொபைல் சேவைகள் இயங்குகின்றன.

1800MHZ இல் செல்பேசிச் சேவை இயங்குகிறது என்றால் என்ன பொருள்? இந்த ஊர்தி அதிர்வெண்ணை(Career Frequency) அடிப்படையாகக் கொண்டு, ஒரு குறிப்பிட்ட அலைப் கற்றையை (spectrum) இந்தச் சேவைக்காக ஒதுக்குவார்கள். வானொலி போல இல்லாமல், செல்பேசிச் சேவைக்கு, இரண்டு அலைவரிசை தேவை. ஒன்று, செல்பேசிச் சேவையின் மையம், செல்பேசி கோபுரங்களோடு தொடர்பு கொள்ள. மற்றொன்று, கோபுரங்கள் தனிப்பட்ட செல்பேசிகளுடன் தொடர்பு கொள்ள. அதாவது,

1710 - 1785 MHz அப்லிங்க் (75 MHZ )
1805 - 1880 MHz டவுன்லிங்க் (75 MHZ)

இதற்குள், எத்தனை செல்பேசி நிறுவனங்களை அனுமதிக்கமுடியும்? ஒரு GSM நிறுவனத்துக்கு 10 MHZம் , ஒரு CDMA நிறுவனத்துக்கு 5MHZம் ஆக, சுமார் 10 நிறுவனங்கள்தான் அதிகபட்சம் ஒரு குறிப்பிட்ட அதிர்வெண்ணில் இருக்கமுடியும்.

900, 1800 ஆகிய இரண்டையும் சேர்த்தால், இதைப்போல இரண்டு மடங்கு இருக்கமுடியும். எனவே இந்த அளவு மட்டுமே மொபைல் நிறுவனங்களுக்கு ஒதுக்க முடியும். இதற்குத்தான் ஏல முறை (Auction Method) பின்பற்றபடுகிறது.

Friday, November 12, 2010

LAND MEASUREMENT



நில அளவுகள் :
    1 ஹெக்டேர் = 2.5 ஏக்கர் (2.47 ஏக்கர் ) 
     1 ஏக்கர் = 4840 குழி (Square Yard)  
    100 சென்ட் = 4840 சதுர குழிகள் 
    1 சென்ட் = 48.4 சதுர குழிகள்
    1 ஏக்கர் = 4067.23 சதுர மீட்டர் (Sq. Meter ) 
     1 ஏக்கர் = 43560 சதுர அடி 
     1 குழி (Square Yard) = 0.8361 சதுர மீட்டர் (Square Meter)
     1 சதுர மீட்டர் (Square Meter) = 1.190 குழி
     1 குழி = 9 சதுர அடி 
     1 சதுர மீட்டர் (Square Meter) = 10.76 சதுர அடி 
     1 குந்தா (Guntha) = 121 குழி = 101.17 சதுர மீட்டர்
     1 குந்தா (Guntha) = 33 அடி * 33 அடி = 1089 சதுர அடி  



Thursday, November 11, 2010

EPF

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி

இந்தியாவில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஓய்வுக்காலத்தில் பயனளிக்கும் விதமாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (Employee's Provident Fund) திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் தொழிலாளர்களுக்கு ஓய்வின் போது அவர்களது வருங்கால வைப்பு நிதியில் சேமிக்கப்பட்ட சேமிப்புத் தொகையும், மாத ஓய்வூதியம் ஆகியவை அளிக்கப்படுகின்றன.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிச் சட்டம்

இந்தியாவில் சமூகப் பாதுகாப்புத் திட்டத்திற்காக இயற்றப்பட்ட சட்டங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது இந்த "தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிச் சட்டம்-1952". இந்தச் சட்டத்தின் மூலம் தொழிலாளர்களுக்கு வருங்காலத்திற்கான ஒரு சேமிப்பும், ஓய்வூதியமும் அளிக்கப்படுவதால் எதிர்காலம் குறித்த பயம் இல்லாமல் இருக்க முடிகிறது.

நோக்கம்

இந்தியாவில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சில ஓய்வுக்கால ஆதாயங்களை வழங்குவதற்கும், அவர் இறந்து விட்டால் அவரை சார்ந்திருக்கும் குடும்பத்தினருக்கு சில உதவிகளை வழங்குவதையும் இச்சட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்துடன் தொழிலாளர்களுக்கு சேமிப்பு உணர்வையும் வளர்க்கிறது.

சட்டம் பொருந்தும் தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்கள்


இந்தியாவில் இருக்கும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தால் அட்டவணைப்படுத்தப்பட்ட தொழில்களில் முதல் அட்டவணையில் வரும் 160 தொழில்கள் செய்துவரும் தொழில் நிறுவனங்கள் இச்சட்டத்தின் கீழ் வருகின்றன. இந்நிறுவனங்களில் 20 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்தால் மட்டுமே இச்சட்டம் நடைமுறைப்படுத்த முடியும். மேலும் இந்நிறுவனங்களில் மாதச்சம்பளம் ரூ6500/-க்குக் குறைவாக சம்பளம் பெறும் தொழிலாளர்களுக்கு மட்டுமே வருங்கால வைப்பு நிதி பிடித்தம் செய்யப்படும்.

சட்டம் பொருந்தாத தொழில் நிறுவனங்கள்

கூட்டுறவுச் சங்கங்களால் நடத்தப்பட்டு கூட்டுறவுச் சட்டத்தினால் கட்டுப்படுத்தப்படும் தொழில் நிறுவனங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள் 50 நபர்களுக்கும் குறைவாக இருந்தால் அத்தொழிற்சாலைகள் இச்சட்டத்தின் கீழ் வராது.

20 க்குக் குறைவான தொழிலாளர்களைக் கொண்டுள்ள தொழில் நிறுவனங்கள் இச்சட்டத்தின் கீழ் வராது

வருங்கால வைப்புநிதி சார்ந்த திட்டங்கள்


வருங்கால வைப்பு நிதித் திட்டத்தைச் சார்ந்து மூன்று திட்டங்கள் செயல் படுத்தப்படுகிறது. இதை இந்திய அரசு "தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி நிறுவனம்" (Employee's Provident Fund Organisation) மூலம் செயல்படுத்தி வருகிறது.

1. தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதித் திட்டம் (Employee's Provident Fund Scheme)
2. தொழிலாளர்கள் குடும்பநல ஓய்வூதியத் திட்டம் (Employee's Family Pension Scheme)
3. தொழிலாளர்கள் வைப்புத் தொகையுடன் இணைந்த காப்பீட்டுத் திட்டம் (EPF Linked Insurance Scheme)

1.தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதித் திட்டம் (EPF)

இத்திட்டத்தின் கீழ் வருங்கால வைப்பு நிதியாக தொழிலாளர்களும், தொழிற்சாலை நிர்வாகங்களும் தொழிலாளர்களின் பெயரில் மாதந்தோறும் சந்தா செலுத்த வேண்டும். இதில் தொழிலாளி வாங்கும் சம்பளம் மற்றும் இதரபடிகளின் மொத்தக்கூட்டுத் தொகையில் 12 சதவிகிதத் தொகையை தொழிலாளியின் சம்பளத்தில் பிடித்தம் செய்து நிர்வாகம் அந்தத் தொழிலாளர் பெயரில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் செலுத்த வேண்டும். இந்தத் தொகை முழுவதும் அந்தத் தொழிலாளர் பெயரில் வருங்கால வைப்பு நிதியாக வைக்கப்படும். இந்த வைப்புத் தொகைக்கு ஆண்டுதோறும் குறிப்பிட்ட சதவிகித வட்டி அளிக்கப்படுவதுடன் அதுவும் வருங்கால வைப்பு நிதித் தொகையில் சேர்த்துக் கொள்ளப்படுகிறது.

2. தொழிலாளர்கள் குடும்பநல ஓய்வூதியத் திட்டம்

தொழிலாளி வாங்கும் சம்பளம் மற்றும் இதரபடிகளின் மொத்தக்கூட்டுத் தொகையில் 12 சதவிகிதத் தொகையை தொழிலாளியின் சம்பளத்தில் பிடித்தம் செய்யும் நிர்வாகம் அதே 12 சதவிகிதத் தொகையை அந்தத் தொழிலாளர் பெயரில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் செலுத்த வேண்டும். இதில் 8.33 சதவிகிதத் தொகை தொழிலாளர்களது குடும்ப நல ஓய்வூதியத்திற்கும், மீதமுள்ள 3.67 சதவிகிதத் தொகை அந்தத் தொழிலாளியின் வருங்கால வைப்பு நிதியில் தொழிலதிபரின் நிதியாகவும் சேர்க்கப்படுகிறது.

3. தொழிலாளர்கள் வைப்புத் தொகையுடன் இணைந்த காப்பீட்டுத் திட்டம்

தொழிலாளி வாங்கும் சம்பளம் மற்றும் இதரபடிகளின் மொத்தக்கூட்டுத் தொகையில் 1.5 சதவிகிதத் தொகையை நிர்வாகம் தனியாக தொழிலாளர்கள் வைப்புத் தொகையுடன் இணைந்த காப்பீட்டுத் திட்டத்திற்காகச் செலுத்த வேண்டும். இத்திட்டத்தின் மூலம் வைப்பு நிதித் திட்டத்திலுள்ள உறுப்பினர்களுக்கு சில ஆயுள் காப்பீட்டு சலுகைகள் வழங்கப்படுகிறது.

வைப்பு நிதிக் கணக்கு முடித்தல்

தொழிலாளர்கள் கீழ்காணும் சில சூழ்நிலைகளில் வைப்பு நிதித் திட்டத்தில் தங்கள் கணக்கை முடித்துக் கொண்டு தங்களுக்குச் சேர வேண்டிய மொத்தத் தொகையும் பெற்றுக் கொள்ளலாம்.

உறுப்பினர் ஓய்வு வயதை அடைந்து விட்ட பின்பு அல்லது ஓய்வு பெறும் பொழுது பெறலாம்.

உடல் நிரந்தர தகுதியிழப்பினால் வேலை செய்ய இயலாமல் போகும் நிலையில் பெறலாம்.

வேலை நீக்கம் அல்லது ஆட்குறைப்பால் வேலை இழக்கும் நிலையில் பெறலாம்.

சுய விருப்பத்தின் பேரில் ஓய்வு பெறும் பொழுது அந்த உறுப்பினர் தனது வைப்புக் கணக்கை முடித்துப் பெறலாம். ஆனால் அந்த உறுப்பினர் வேறு ஒரு தொழிலாளர் வைப்பு நிதித் திட்டம் நடைமுறையில் இருக்கும் நிறுவனத்தில் சேர்ந்தால் அவரது கணக்கு புதிதாகச் சேர்ந்த நிறுவனத்தின் கணக்குடன் சேர்த்துக் கொள்ளப்படும். இல்லையென்றால் ஓய்வு பெற்ற நாளிலிருந்து அறுபது நாட்களுக்குப் பின்பு தொழிலாளர் வைப்பு நிதித் திட்டம் நடைமுறையில் இருக்கும் நிறுவனத்தில் வேலை செய்யவில்லை என்று உறுதி அளித்து கணக்கை முடித்துக் கொள்ளலாம்.

Source: முத்துக்கமலம் இணைய இதழில் வந்த கட்டுரை

NATURAL FOOD

இயற்கை உணவு

நாம் இயற்கை உணவு உண்ணும் பொழுதோ அல்லது இயற்கை சக்திகளான மழை, சூரியன், சுத்தமான நீர், சுத்தமான காற்று போன்றவற்றுடன் தொடர்பு கொள்ளும் பொழுதோ நம் உடலில் சமைத்த உணவினாலோ அல்லது தீய பழக்க வழக்கத்தினாலோ உண்டான கழி வுகள் உடலில் இருந்து வெளியேறத் தொடங்குகிறது. அதனால் தான் பழங்கள் உண்ணும் போது சளி பிடிக்கிறது, வெயிலில் செல்லும் போது தலைவலியும் மழையில் செல்லும் போது காய்ச்சலும் வருகிறது. ஆனால் நாம் பழம் சாப்பிட்டால் சளி பிடிக்கும், வெயில், மழை ஒத்துக்கொள்ளாது என்று கூறி இயற்கையை விட்டு விலகி இருக்கிறோம். மருந்து மாத்திரைகளை உண்டு கழிவுகளை வெளியேற விடாமல் உடலுக்குள்ளேயே அடக்கி உடல் நலனை மேலும் கெடுத்துக் கொள்கிறோம்.

கழிவுகளின் நீக்கம் எப்படி நடக்கும்?

இயற்கை உணவு உண்ணும் பொழுது நம் உடலில் இருந்து பல வகையில் கழிவுகள் வெளியேறத் தொடங்கு கிறது. அவற்றை கண்டு நாம் பயப்படத் தேவையில்லை. நம் உடலில் இருந்து அழுக்குகள் வெளியேறுகிறது என நாம் மகிழ்ச்சி அடையவெ வேண்டும்.
பல வகை கழிவுகள் வெளியேற்றம்

(1) தலைவலி
(2) உடல் வலி
(3) சோர்வு
(4) தூக்கம்
(5) காய்ச்சல்
(6) தோல் வியாதிகள்
(7) வயிற்று போக்கு
(8) சளி, இருமல்
(9) நகங்களின் வழியாக
(10) உடல் துர்நாற்றம்
(11) வாய் துர்நாற்றம்
(12) வாந்தி

இவை அனைத்தும் நம் உடலில் இருந்து கழிவுகள் வெளியேறுவதன் அடையாளமே தவிர பயப்படத் தேவையில்லை. நோயாளியின் மன உறுதி, தைரியம். ஒத்துழைப்பு இவையே முக்கியமாகும். இயற்கை உணவால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஒருவர் நன்றாக புரிந்து கொண்டால் அது அவர் விரைவில் குணமாக உதவும்.

கழிவுகள் நீங்கும் பொழுது செய்ய வேண்டியது

கழிவுகள் நீங்கும் பொழுது இயன்ற அளவு ஓய்வு எடுக்க வேண்டும்.

தலை வலி
எனிமா எடுக்க வேண்டும். தலை வலி குறையும் வரை ஈரமண் பட்டி அல்லது ஈரத்துணிப் பட்டி தலையிலும் அடிவயிற்றிலும் போட வேண்டும். வாழை இலை குளியல், சூரிய ஒளி குளியல் உகந்தது. நீராவிக் குளியல் மழைக் காலங்களிலும் குளிர் பிரதேசங்களிலும் எடுக்கலாம்.

உடல் வலி, சோர்வு, தூக்கம், சளி, இருமல் அதிக அளவு பழச்சாறுகள் (சாறுள்ள பழங்களான மாதுளை, ஆரஞ்சு, திராட்சை, நெல்லி, எ லுமிச்சை) எடுத்துக் கொள்ள வேண்டும். எலுமிச்சை சாறு குடிக்கும் போது 5 சொட்டு+200 மி.மி. தண்ணீர் எனக் குடிக்க வேண்டும். பேரிச்சம் பழங்கள் நிறைய உண்ணலாம்.

காய்ச்சல்

எனிமா, ஈரத்துணிப்பட்டி, ஈரமண்பட்டி தலையிலும் அடிவயிற்றுலும் போடலாம். பழச்சாறுகள் நிறைய அருந்தலாம். காய்ச்சல் அதிகமாக இருந்தால் இடுப்புக் குளியல் எடுக்கலாம்.

உடல் துர்நாற்றம் மற்றும் வாய் துர்நாற்றம்

இயற்கை உணவையே தொடர்ந்து கடைபிடிக்கவும். வாழை இலை குளியல், மண் குளியல் உகந்தது.

வாந்தி
கல்லிரலில் உண்டாகும் வெப்பத்தினால் தான் வாந்தி ஏற்படுகிறது. சிட்ரிக் அமிலம் உள்ள பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை மற்றும் இளநீர் ஆகியவை குடித்து வந்தால் வெப்பம் தணியும். முழு ஓய்வு எடுக்க முடிந்தால் உண்ணா நோன்பு இருக்கலாம்.

தோல் வியாதிகள்
காய்கறி மற்றும் பழச்சாறுகளை தோலில் பாதிக்கப்பட்ட இடங்களில் போடுவது உகந்தது. சுத்தமான மண்ணையும் போடலாம்.

வயிற்றுப் போக்கு
மாதுளம் பழச்சாறும் இளநீரும் நிறைய அருந்த வேண்டும். (அதிக அளவு பழம் வாங்க இயலாதவர்கள் பச்சை இலைச் சாறு (புதினா, கொத்தமல்லி, கருவேப்பிலை,கீரை வகைகள்) சேர்த்துக் கொள்ளலாம்.) அதில் நெல்லிக்காயும் சிறிதளவு இஞ்சியும் சேர்க்கலாம்.

ஆகவே நண்பர்களே இன்று முதல் நாமும் இயற்கை உணவை உண்டு உடல் நலம் பெறுவோம்.

Wednesday, November 10, 2010

REDUCE SALT

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உணவில் உப்பின் அளவை குறையுங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு படத்துல என்ன சொல்வாருன்னா "பணம் கொஞ்சமா சேர்த்தா அது உன்னை காப்பாத்தும்!" “அதே பணத்தை அதிகமா சேர்த்தா அதை நீ காப்பத்தணும்.”

அந்த மாதிரி தான் "உப்பு கொஞ்சமா உடம்புல இருந்தா அது நல்லது ஆனா அதுவே அதிகமா போச்சுன்னா ஆரோக்கியத்துக்கு பெரும் ஆபத்து"

உப்புல இருக்கிற சோடியம் தசைகளை சுருக்கி விரிக்க பயன்படுது! நரம்புகள் தகவல்களை பரிமாறிக்க பயன்படுது. ஆனா இது குறைவா இருந்தா தான் இந்த நன்மை கிடைக்கும்.

ஒரு நாளைக்கு ஒரு டீஸ்பூன் அதாவது ரெண்டரை கிராம் உப்பு நமக்கு தேவை படுது.ஆனால் இன்றைய தலைமுறைய சேர்ந்தவங்க, நிறைய உப்பு சாப்பிடற வாய்ப்பு அதிகமா இருக்குங்க

பெரிய பெரிய துரித உணவகம்ல(Fast Food) உள்ள French Fries, burger, Pizza, Chicken fry -ன்னு இஷ்டத்துக்கு வயித்துக்குள்ளாற தள்ளுறாங்க இல்ல? இந்த மாதிரி குப்பை உணவை ஆங்கிலத்தில Junk food-ன்னு சொல்வாங்க. இதில் எல்லாம் உப்பை தாராளமாக பயன்படுத்துகிறார்கள் .

இதனால சாப்பிடறவங்க உடம்புல அதிகமா உப்பு சேர்ந்து பாதிப்பை உண்டாக்குது. ஒரு புள்ளி விபரம் என்ன சொல்லுதுன்னா, இந்த மாதிரி உணவு சாப்பிடறவங்க, தினமும் தங்களுக்கே தெரியாம சராசரியா 10 கிராம் வரைக்கும் கூட உப்பு சாப்பிடறாங்களாம்.

அதாவது தேவைக்கு அதிகமா 4 மடங்கு உப்பு சாப்பிடறாங்க. இதனால இரத்த கொதிப்பு நோய் - அதுதான் High BP நோய் வருகிறது. உப்பு அதிகமா இருந்ததுன்னா அது தண்ணிய உடம்புக்குள்ள அதிகமா தக்க வைக்கும்.

பலரு அளவுக்கு அதிகமா குண்டாக இருக்கிறதுக்கு இந்த மாதிரி அதிகமா உப்பு சாப்பிடறதும் ஒரு காரணம்.

Edema - அதாவது நீர் கோத்து கை மற்றும் கால் எல்லாம் ஊதி போகிற நோய். அதுக்கு காரணம் கூட இதுதான். மஞ்சள் காமலை போல உப்பு காமலை நோய் வரும்.

இதனால் இதய கோளாறுங்க பலவும் வருகிறது. அதுமட்டும் இன்றி பக்கவாதம்(Stroke) கூட இதனால் வருது. நம்மோட Kidney எல்லாம் கூட பாதிக்கப்படுகிறது.

இது நாமே வழியில போற நோயை விரும்பி வரவழைக்கிற மாதிரி தானே. ஆகவே இன்று முதல் நமது உணவில் உப்பின் அளவைக் குறைத்து ஆரோக்கியமாக வாழ்வோம் வளம் பெறுவோம்....

Tuesday, November 9, 2010

SYSTEM TROUBLESHOOTING

System Errors & Solutions:

1.No Fixed Disk present:
காரணம் :ஹார்ட்ரைவ் சரியாக இணைக்கவில்லை என்றால் இவ்வாறு பிழைச்செய்தி வரும். ஹார்ட்ரைவின் மின் இணைப்பானை சரிபார்க்கவும் .அனைத்து கேபிளிலும் சரியான மின்னழுத்தம் உள்ளதா என்று சரிபார்க்கவும். பிறகு இணைப்பு கேபிளை சரியாக இணைக்கவும்.

2.Error Reading Drive “C"
ஹார்ட்ரைவின் இணைப்புகள் சரியாகவுள்ளதா என்று சரிபார்க்கவும்.இணைப்புக் கேபிளில் பழுதிருந்தால் அதை மாற்றிடவும்.மீண்டும் பிழை செய்திவந்தால் ஆண்டிவைரஸ் நிரலை பயன்படுத்தி வைரஸ் இருந்தால் அதை நீக்கிவிடவும்.பிறகும் பிழை செய்தி வந்தால் "Scan disk" -ஐ இயக்கி செக்டார்கள் ஏதும் பழுதாகியுள்ளதா என்று பார்க்கவும்.செக்டார்கள் பழுதாகி இருந்தால் ஹார்ட்ரைவை மாற்றவும்.

3.Track 0 not Found
டிரைவின் ட்ராக் "0"கெட்டிருந்தால் இவ்வாறு பிழைச்செய்தி வரும்.டிரைவின் கோப்பு விவர அட்டவணை(FAT)இங்கு தான் பதிந்திருக்கும் .இந்த அட்டவணையைக் கொண்டுதான் டிரைவில் பதிந்திருக்கும் அனைத்துத் தகவலையும் எழுத /படிக்க முடியும் .பூட் பிளாப்பியை பயன்படுத்தி
ஹார்ட்டிரைவை பார்ட்டீசியன் பன்னவும் .மீண்டும் இதே பிழை செய்தி வந்தால் ஹார்ட்டிரைவை மாற்றவும்.

4.கணினியை "ஆன்"செய்தும் திரையில் டிஸ்பிளே வரவில்லை .
1.மானிட்டரின் மின் கேபிள் சரியாக இணைக்கப்பட்டுள்ளதா என்று சரிபார்க்கவும்.
2.
மானிட்டரின் பொத்தான் (Button) "ஆன்"ஆகியுள்ளதா என்று பார்க்கவும்.
3.
மானிட்டரின் இணைப்பு கேபிளை(interface cable) சரிபார்க்கவும்.
4.
மானிட்டரின் Brightness control-ஐச் சரிபார்க்கவும்.
5.
வி color="#0000ff">.ஜி.ஏ கார்டைச் சரிபார்க்கவும்.
6.
நினைவகத்தை சரிபார்க்கவும்.

5.கணினியை "ஆன்" செய்தவுடன் ஒரு பெரிய பீப் ஒலி மற்றும் இரண்டு சிறிய பீப் ஒலி வந்துடிஸ்பிளே வரவில்லை என்றால்:
1.வி.ஜி.(VGA) கார்டைச் சரிபார்க்கவும்.
2.
வேறு வி.ஜி.ஏ கார்டை மாற்றவும்.

6.கணினியை"ஆன்"செய்தவுடன்"No keyboard is connected " அல்லது"Keyboard not present" என்ற பிழைச் செய்தி வருகிறது .
1.விசைப்பலகை சரியாக இணைக்கப்பட்டுள்ளதா என்று சரிபார்க்கவும்.
2.
விசைப்பலகையின் கேபிளை சரிபார்க்கவும் .எங்கேனும் துண்டிக்கப்பட்டுள்ளதா என்று பார்க்கவும்.
3.
நன்றாக இயங்கும் வேறு ஒரு விசைப்பலகையை இணைக்கவும்.அதன்பிறகும் பிழை செய்தி வந்தால் மதர்போர்டின் விசைப்பலகை இணைப்பானில் பிரச்சனை இருக்கலாம் .


7.DVD-ல்உள்ள தட்டை(tray) பகுதி வெளிவரவில்லை
1.DVDமூலம் ஏதேனும் படங்களை இயக்கி கொண்டிருக்கும் போது வெளிவராது .எனவே DVDமூலம் திறந்திருக்கும் மென்பொருள்களை மூடி விட்டு முயற்சிக்கவும்.இல்லையென்றால் கனினியை ரீஸ்டார்ட் செய்தபின்
முயற்சிக்கவும்
.
2.DVDடிரைவின் மின் இணைப்பியை சரிபார்க்கவும்.அப்படியும் திறக்கவில்லையா டிவிடி தட்டை இயக்கும் மோட்டார் பழுந்தடைந்திருக்கலாம் .
3.
டிவிடி டிரைவின் முன் புறம் உள்ள சிறுதுளையில் நீண்ட மெல்லிய கம்பியை நுழைத்தால் டிவிடி தட்டைப் பகுதி வெளியே வரும்.

8.கணினியை " ஆன் "செய்தவுடன் தொடர்ச்சியாக பீப் ஒலி வந்து டிஸ்பிளே வரவில்லை என்றால்..

1.நினைவகத்தை (RAM) சரியாக இணைக்கவும்
2.
நினைவகத்தை மாற்றவும் .

9.Bad command are file name..
நீங்கள் கொடுத்த டாஸ்(DOS) கட்டளை சரியான கட்டளைதானா என்று சரிபார்க்கவும் .கட்டளையில் ஏதேனும் சிறு தவறு நேர்ந்திருந்தாலும் இவ்வாறு பிழை செய்தி வரும்.

10.Insufficient Disk Space
டிஸ்க்-ல் தகவலை பதிக்க போதிய இடம் இல்லையெனில் இவ்வாறு பிழைச்செய்தி வரும்.தேவையில்லாத கோப்புகளை அழித்துவிட்டால் இடம் கிடைக்கும்.

 


FALLS WATER : WHITE

அருவியில் உள்ள நீர் வெள்ளை நிறமாக தோன்ற என்ன காரணம்?

தண்ணீருக்கு நிறமில்லை. பார்ப்பதற்கு அது ஒளி ஊடுருவும் கண்ணாடி போலத்தான் இருக்கிறது. அருவியில் தண்ணீர் கீழே விழும்போது கையில் ஏந்திப் பார்த்தால் கண்ணாடி போலவே இருக்கிறது. ஆனால், அருவியில் தண்ணீர் விழும்போது பார்த்தால், அது கண்ணாடி போலில்லையே. வெண்மை நிறத்தில் இருக்கிறதே. அப்படியானால் மேலிருந்து கீழே வரும் இடைப்பட்ட நேரத்தில், தண்ணீருக்கு வெண்மை நிறத்தைத் தந்தது யார்?

ஒரு பொருளின் மேற்பரப்பு அனைத்து நிறங்களையும் பிரதிபலித்தால் அது வெண்மை நிறமாகத் தோன்றும். அருவிகளில் என்ன நடக்கிறது என்றால், தண்ணீர் காற்றைக் கடந்து கீழே விழுகிறது. அப்பொழுது அது தண்ணீரும் காற்றும் கலந்த, சீரில்லாத ஒரு கலவையாகவே விழுகிறது. வழக்கமாக, தண்ணீருக்கு வெளியே உள்ள அடர்த்தி குறைந்த காற்று ஊடகத்திலிருந்து, அடர்த்தியான நீர் ஊடகத்திற்குள் ஒளி புகும்போது, அதன் மேற்பரப்பு சிறிது ஒளியை எதிரொளிக்கிறது.

எஞ்சிய ஒளி விலகிச் செல்கிறது. இதுவே ஒளிவிலகல் ஆகும். அருவியில் என்ன நடக்கிறது? ஒளி அதிக அளவில் எதிரொளிக்கப்படுகிறது. அதேநேரம், ஒளிவிலகலும் மிக அதிகமாக நடைபெறுகிறது.

ஒளிவிலகல் அலகில் ஏற்படும் மாறுபாடே இதற்குக் காரணம் (ஒளிவிலகல் விகிதத்தில் ஏற்படும் மாறுபாடே ஒளிவிலகல் அலகு எனப்படுகிறது). இதன்காரணமாக, அதிக ஒளி எதிரொளிக்கப்படுகிறது. இது எப்படி நடக்கிறது? உச்சத்தில் உள்ள நீர்அடுக்கில் ஏற்படும் ஒளிவிலகல், அதற்கு அடுத்த அடுக்கில் உள்ள நீர்த்துளிகள் ஒளியை எதிரொளிக்க உதவுகிறது. இதன்காரணமாக, அருவியில் பெரும்பாலான ஒளி எதிரொளிக்கப்படுகிறது. இதனால், அருவி வெண்மை நிறத்தில் தோற்றமளிக்கிறது.

மூடுபனி, காகிதம், நீராவி, மேகம், பனி, சர்க்கரை, வெள்ளை பெயின்ட் போன்றவை வெண்மை நிறத்தில் இருப்பதற்கு இதுவே காரணம். இதில் வெள்ளை பெயின்ட் விசேஷமானது.

மற்ற பெயின்ட்டுகளில் உள்ளதுபோல, வெள்ளை பெயின்ட்டில் வெள்ளை நிறமிகள் கிடையாது. எதிரொளிப்பால்தான் வெள்ளை பெயின்ட் அந்த நிறத்தைப் பெறுகிறது.

மேலும், அருவி வெண்மை நிறத்தில் தோற்றமளிக்க, ஒளி ஒரு குறிப்பிட்ட திசையில் இருந்து மட்டும் வரக்கூடாது. அப்படி வந்தால், நீர்த்துளிகளால் அந்த ஒளி எதிரொளிக்கப்பட்டு வானவில் ஏற்படும் (மழை பெய்யும்போது இதன் காரணமாகவே வானவில்லைப் பார்க்க முடிகிறது).

இதற்கு மாறாக, எல்லா திசைகளில் இருந்தும் அருவியின் மீது ஒளி பாய்வதால்தான், ஒளி பல்வேறு திசைகளில் இருந்து எதிரொளிக்கப்பட்டு அது வெண்மை நிறத்தில் நமக்குத் தோற்றமளிக்கிறது.

Wednesday, November 3, 2010

DIWALI HISTORY

தீபாவளி வரலாறு

தீபாவளி,ஐப்பசி மாதம் அமாவாசை அன்று கொண்டாடும் ஓர் இந்து பண்டிகையாகும். இந்துக்கள் மட்டுமின்றி சீக்கியர்களும், சமணர்களும் கூட இப்பண்டிகையை வெவ்வேறு காரணங்களுக்காக கொண்டாடுகின்றனர். தமிழர்கள் இப்பண்டிகையை முக்கியப் பண்டிகையாக
கருதுவதில்லை
. இருப்பினும் மலேசியா, சிங்கையில் வாழும் தமிழர்கள் தீபாவளியைக் கோலாகலமாகக் கொண்டாடச் செய்கின்றனர்.


பெயர்க் காரணம்

'தீபம்'என்றால் ஒளி, விளக்கு.'ஆவளி' என்றால் வரிசை. வரிசையாய்
விளக்கேற்றி
, இருள் நீக்கி, ஒளி தரும் பண்டிகையே தீபாவளி ஆகும்.தீபத்தில் பரமாத்மாவும்,நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து அருள் தருவதாய் ஐதீகம். ஒவ்வொருத்தர் மனதிலும் ஒரு சில இருட்டு உள்ளது. அகங்காரம்,பொறாமை, தலைக்கணம்
போன்ற எதையாவது ஒன்றை அகற்ற வேண்டும்
. ஒரு தீய குணத்தை எரித்துவிட வேண்டும்.

தோற்ற மரபு

இந்துக்களின் தீபாவளி

இந்துக்கள் திபாவளி கொண்டாடுவதற்கு பல காரணங்களை, புராணக் கதைகளின் வழியாகக் கூறுகின்றனர்.

  • இராமன் பதினான்கு வருடங்கள் வனவாசம் முடித்து, நாடு
    திரும்பும் போது மக்கள் விளக்கேற்றி வரவேற்றனர்
    .

  • புராணக் கதைகளின் படி, கிருசுணனின் இரு மனைவியருள் ஒருவளான நிலமகளுக்கு பிறந்த மகன் ஒரு அசுரன் . அப்போது
    கிருசுணன் வராக
    (பன்றி)அவதாரம் எடுத்திருந்தான். பிறந்த அசுரனின் பெயர் நரகன். அந்நரகன்,தன் அன்னையால் மட்டுமே தனக்கு இறப்பு ஏற்பட வேண்டும் என்று வரம் வாங்கியிருந்தான். அவனின் அநீதிகளை நிறுத்த வேண்டி, கிருசுணன் தனதுத்திறமையால் அந்நரகாசுரனை இறக்க வைக்கிறான்.

  • கிருஷ்ணர், நரகாசுரன் என்ற அசுரனைக் கொன்ற போது, அவன் தான் இறக்கும் தினத்தை மக்கள் கொண்டாட வேண்டும் என்று கேட்ட வரத்திற்கிணங்க தீபாவளி மகிழ்ச்சியாகக் கொண்டாடப்படுகின்றது.

  • இராமாயண இதிகாசத்தில், இராமர்,இராவணனை அழித்து விட்டு, தனது வனவாசத்தையும் முடித்து விட்டு, மனைவி சீதையுடனும் சகோதரன் இலட்சுமணனுடனும் அயோத்தி திரும்பிய நாளை, அயோத்தி மக்கள் ஊரெங்கும் விளக்கேற்றிக் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நாளே தீபாவளியாக கொண்டாடப் படுவதாக கருதப் படுகிறது.

  • ஸ்கந்தபுராணத்தின் படி, சக்தியின்21 நாள் கேதார விரதம்முடிவுற்றது இத்தினத்தில் தான். விரதம் முடிவடைந்த பின்னர் சிவன்,
    சக்தியை தன்னில் ஒரு பாதியாக ஏற்று 'அர்த்தநாரீஸ்வரர்' உருவமெடுத்தார்.

சீக்கியர்களின் தீபாவளி

1577-இல் இத்தினத்தில், தங்கக் கோயில் கட்டுமான பணிகள் துவங்கியதையே சீக்கியர்கள் இந்நாளில் கொண்டாடுகின்றனர்.

சமணர்களின் தீமாவளி

மகாவீரா
நிர்வானம் அடைந்த தினத்தை நினைவு கூர்ந்து
, இத்தினத்தை சமணர்கள் கொண்டாடுகின்றனர்.

கொண்டாடும் முறை

தீபாவளி அன்று அனைவரும் அதிகாலையில் எழுவர். இல்லத்தின் மூத்த உறுப்பினர் ஒவ்வொருவர் காலிலும் நலங்கு (மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த கலவை)இட்டு மகிழ்வர்.பின் எண்ணெய்க் குளியல்(கங்கா குளியல்)
செய்வர். நல்லெண்ணெயில் ஓமம் மற்றும் மிளகு போட்டுக் காய்ச்சுவது சிலரது வழக்கம்.மக்கள் புத்தாடை உடுத்தியும் பட்டாசுகள் வெடித்தும் மகிழ்வர்.

பொதுவாக தீபாவளி அன்று பாரம்பரிய உடைகளை அணியவே பெரும்பாலான தென்னிந்திய மக்கள் விரும்புகின்றனர். அன்று அநேக பெண்கள் புடவையும் (குறிப்பாக பட்டுப்புடவை)ஆண்கள் வேட்டியும் உடுப்பர். தீபாவளி அன்று ஒவ்வொரு இல்லத்திலும் மங்கள இசையான நாதசுவரம் ஒலிக்கும். அன்று
இனிப்புக்கள் நிறைய செய்து ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வர்
.
பரிசுகள் தந்து மகிழ்வர். பெரியோரை வணங்கி வாழ்த்து பெறுவர்.
தீபாவளி இலேகியம்(செரிமானத்திற்கு உகந்தது) அருந்துவதும் மரபு.

தீபாவளியன்று நீராடுவதை மட்டும் புனித நீராடல் என்று சொல்வதற்கு
காரணம்
, அன்றைய தினம், அதிகாலையில் எல்லா இடங்களிலும், தண்ணீரில் கங்கையும், எண்ணெயில் லட்சுமியும் அரப்பில் சரஸ்வதியும், குங்குமத்தில் கௌரியும், சந்தனத்தில்
பூமாதேவியும்
, புத்தாடைகளில் மஹாவிஷ்ணுவும் வசிப்பதாக
கருதப்படுவதேயாகும்
. அந்த நீராடலைத்தான் "கங்கா
ஸ்நானம் ஆச்சா
" என்று ஒருவருக்கொருவர் விசாரிப்பர்.அன்றைய தினம், எல்லா நதிகள், ஏரிகள், குளங்கள், கிணறுகளிலும்,நீர்நிலைகளும் "கங்கா தேவி" வியாபித்து இருப்பதாக ஐதீகம். அடிப்படையில் இந்துப் பண்டிகையாய் இருந்தாலும்,சாதி மத வேறுபாடின்றி அனைவரும் ஒற்றுமையாய் கொண்டாடும் பண்டிகை தீபாவளி.

Source: Wikipedia


எமது வலைப்பூ நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!!

இந்த இனிய நன்னாளில்,

உங்கள் இல்லங்களில் மகிழ்ச்சி மத்தாப்பூ பூக்கட்டும்... 

உங்கள் மனங்களில் சந்தோஷம் என்றும் நிலைக்கட்டும்.....

வாழ்த்துக்களுடன்,

க.அண்ணாமலை