BLOG QUOTE

விடியும் என்று விண்ணை நம்பும் நீ முடியும் என்று உன்னை நம்பு!

தோல்வி உன்னை தோற்கடிக்கும் முன் நீ தோல்வியைத் தோற்கடித்து விடு ....

QUOTE 1

உழைப்பு என்பது ஒரு கோப்பை பால் போன்றது..
அதிர்ஷ்டம் என்பது ஒரு கரண்டி சர்க்கரை போன்றது..

Wednesday, October 27, 2010

INDIAN LEGENDS AUTOGRAPH

நம் நாட்டின் பிரபலங்களின் கையெழுத்துக்கள் (AUTOGRAPHS OF VALUABLE LEGENDS)
ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் 
இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் & ஒரு சிறந்த விஞ்ஞானியும் பொறியியலாளரும் ஆவார்.
விருதுகள்: பத்ம பூஷன் (1981),பத்மா விபூஷன் (1990),பாரத் ரத்னா (1997).

  A%20P%20J%20Abdul-Kalam.jpg
அபுல் கலாம் ஆசாத் 

ஹிந்து முஸ்லிம் ஒற்றுமைக்காக பாடுபட்டவர்.

  moulana_abul_kalam.jpg

டாக்டர். அமர்தியா சென் 

பொருளாதார அறிஞர் . இவர் 1998 இல் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்றார்.

விருதுகள்: நோபல் பரிசு (1998) & பாரத் ரத்னா (1999)

180px-Amartya_Sen_20071128_cologne.jpg 

டாக்டர். அம்பேத்கர் 

முதலாவது சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் சாசனத்தின் தலைமைச் சிற்பி ஆகவும் செயல்பட்டார். தீண்டாமைக் கொடுமைகளை எதிர்த்து டாக்டர் அம்பேத்கர் தீவிரமாகப் போராடினார்.

  150px-Ambedkar_P25.gif   

பாலா  கங்காதர திலகர்

இந்தியாவுக்கு முதன் முதலில் தன்னாட்சி கோரியவர்களுள் திலகரும் ஒருவர். தன்னாட்சி எனது பிறப்புரிமை அதனை நான் பெறுவேன் என்னும் இவரது புகழ் பெற்ற கூற்று இன்றும் இந்தியாவில் நினைவுகூரப்படுகிறது.

 150px-Bal_Gangadhar_Tilak.jpg   

கோபால கிருஷ்ண கோகலே

ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு எதிராக இந்திய சுதந்திர போராட்டத்தின்போது உருவான சமூக மற்றும் அரசியல் தலைவர்களில் ஒருவராவார்.கோகலே தன்னுடைய குறிக்கோள்களை அடைவதற்காக இரு முக்கிய கொள்கைகளைப் பின்பற்றினார்: வன்முறையைத் தவிர்த்தல் மற்றும் இருக்கும் அரசு நிறுவனங்களுக்குள்ளேயே மாற்றத்தைக் கொண்டுவருதல்

  200px-Gopal_krishan_gokhale.jpg     

இந்திரா  காந்தி 

இந்தியாவின் முதல் பெண் பிரதம மந்திரியாக அமர்ந்த அவர், இன்று வரை, ஒரே பெண் பிரதம மந்திரியாகவும் இருந்தார்.அரசியல் செல்வாக்கு பெற்ற நேரு குடும்பத்தில் பிறந்தவர்.

  images?q=tbn:ANd9GcT-j9EoNOb9zVnI-Qx_G2N920TWyM7vEd4-xxuPjAwa246vFEI&t=1&usg=__sCCqcomCUFxLijUOIRjrdRgYhNc=   

ஜெஹாங்கிர் ரத்தன்ஜி தாதாபாய் டாடா 

ஜெஹாங்கிர் ரத்தன்ஜி தாதாபாய் டாடா இந்தியாவின் முதன்மையான தொழிலதிபர்களுள் ஒருவர் ஆவார். இவர் இந்திய வானூர்திப் போக்குவரத்தின் முன்னோடியாகக் கூறப்படுகிறார்.

விருதுகள் : பத்ம விபூசண்(1957) & பாரத் ரத்னா(1992)

 JRD_Tata.jpg        

ஜவஹர்லால் நேரு 
இந்திய சுதந்திர இயக்கத்தின் முன்னோடியான பாரத ரத்னா நேரு,காங்கிரஸ் கட்சியினால் தேர்ந்தெடுக்கப்பட்டு, 1952 இல் இந்தியாவின் முதல் பொதுத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதும் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக பதவி ஏற்றார்.

   Pm_nehru.jpg        

லால் பகதூர் சாஸ்திரி 

 இந்தியாவின் மூன்றாவது பிரதமர். இவர் ஒரு முக்கியமான விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். இவர் பதவியேற்று 2 ஆண்டுகளுக்கு உள்ளாகவே, சோவியத் ஒன்றியத்திலுள்ள தாஷ்கண்டில் கூட்டப்பட்ட உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட போது காலமானார்.

LBS.jpg

மகாத்மா  காந்தி 

இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் "விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார். சத்தியாகிரகம் என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது.இவரது பிறந்த நாள் இந்தியாவில் காந்தி ஜெயந்தி என்று கொண்டாடப்படுகிறது.          

 225px-MKGandhi.jpg   

டாக்டர். மன்மோகன் சிங் 

மன்மோகன் சிங் இந்தியாவின் பதினான்காவது பிரதமர் ஆவார். 1991 முதல் 1996 வரை பி. வி. நரசிம்ம ராவ் அமைச்சரவையில் மன்மோகன் சிங் நிதி அமைச்சராக பணியாற்றினார். கல்வியாலும், பயிற்சியாலும் தேர்ந்த பொருளாதாரவியல் வல்லுநரான அவர், இந்தியாவின் பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கையின் துவக்கத்தில் பெரும் பங்கு வகித்தார். மன்மோகன் சிங் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். மேலும் மத்திய ரிசர்வ் வங்கியின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். அவர் நிதியமைச்சராகும் முன் பின்தங்கிய நிலையில் இருந்த இந்திய பொருளாதாரம், இவரின் கொள்கைகளால் முன்னேறத் துவங்கியது எனக் கருதப்படுகிறது.

   250px-Manmohansingh04052007.jpg 

மொரார்ஜி  தேசாய்

இந்திய விடுதலைப்போராட்ட வீரரும், இந்திய பிரதமரும், இந்திய அரசியல்வாதியும் ஆவார். இவரே இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சாராத முதல் இந்தியப்பிரதமர் ஆவார். இந்திய குடிமகனுக்கு வழங்கப்படும் உயரிய விருதான பாரத ரத்னாவையும் பாகிஸ்தான் குடிமகனுக்கு வழங்கப்படும் உயரிய விருதான நிசான்-இ-பாகிஸ்தானையும் பெற்ற ஒரே இந்தியர் இவரே.

  Morarji_desai.jpg 

அன்னை தெரசா 

நாற்பத்தைந்து வருடங்களுக்கு மேலாக அவர் ஏழைஎளியோர்களுக்கும், நோய்வாய்ப்பட்டோருக்கும், அனாதைகளுக்கும், இறக்கும் தருவாயிலிருப்போர்களுக்கும் தொண்டாற்றிக் கொண்டே, முதலில் இந்தியா முழுவதும் பின்னர் ஏனைய வெளிநாடுகளுக்கும் மிஷினரீஸ் ஆப் சேரிட்டி-யை விஸ்தரித்தவர். 

விருதுகள் :1979-ல் அமைதிக்கான நோபல் பரிசும், 1980-ல் மனிதநேய பணிகளுக்காக இந்தியாவின் சிறந்த குடிமக்கள் விருதான பாரத ரத்னாவும் பெற்றார்.

  images?q=tbn:ANd9GcSQiTykmsN266m3pB8IX5QQbP9eCD-551ZoeM-4-nuFc8F-Dhk&t=1&usg=__NJR9AEQ3YK_G54-zlAIK41oD0SI=  

சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்

சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத்தலைவரும், இரண்டாவது குடியரசுத் தலைவரும் ஆவார்.இவர் பிறந்த தினமான செப்டம்பர் 5, இந்தியாவில் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. 

 விருதுகள்: பாரத ரத்னா விருது (1954)

sarvepalli_1116.jpg 

டாக்டர். இராஜேந்திரப் பிரசாத்

டாக்டர் இராஜேந்திரப் பிரசாத் (Rajendra Prasad) இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவரும் இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். காங்கிரஸ் கட்சித் தலைவர்களுள் ஒருவர். 1950 முதல் 1962 வரை இந்திய குடியரசுத் தலைவராக இருந்தார்.

 225px-Dr_Rajendra_Prasad.jpg

ராஜீவ் காந்தி

 ராஜீவ் காந்திஅரசியல் மீது ஆர்வமில்லாது, விமான ஓட்டும் தொழிலில் ஈடுபட்டிருந்தார். இவரது தாயாரான பிரதமர் இந்திரா காந்தி 1984, அக்டோபர் 31 ஆம் திகதி சுட்டுக்கொல்லப்பட்டதன் பின் இந்தியப் பிரதமரானவர்.இந்திய அமைதி காக்கும் படையினை இலங்கைக்கு அனுப்பி தமிழர்களுக்கு கூட்டாச்சி முறையிலான உரிமையை பெற்று தர முயன்றார். இவர் 1991 ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படையினரால் வெடிகுண்டு மூலம் கொல்லப்பட்டார்.

 RajivGandhi.jpg  

சர் சி.வி. இராமன் 

பெரும் புகழ் நாட்டிய இந்திய அறிவியல் அறிஞர். இவர் 1930ல் இயற்பியல் துறைக்கான நோபல் பரிசைப் பெற்றார். ஒளி ஒரு பொருளின் ஊடே செல்லும் பொழுது சிதறும் ஒளியலைகளில் ஏற்படும் அலைநீள மாற்றத்தை இவர் கண்டுபிடித்தார். இப்படிச் சிதறும் ஒளியின் அலைநீள மாற்றதிற்கு இராமன் விளைவு (Raman Effect) என்று பெயர். இக்கண்டுபிடிப்புக்குத் தான் இவருக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டது

    Chandrasekhara_Venkata_Raman.jpg    

விருதுகள்: நோபல் பரிசு(1930), பாரத ரத்னா விருது (1954), உலக லெனின் பரிசு (1957), பிராங்க்ளின் பதக்கம் (1941), ராஜ்சபாபூசன் (1935), மேட்யூச்சி பதக்கம், சர் பட்டம் (1929), "நைட் ஹீட்" எனும் பட்டம் (1929),

ரத்தன் டாட்டா

இந்தியாவின் மிகப்பெரிய தொழிற்திரளான டாடா குழுமத்தின் தற்போதைய தலைவராக உள்ளார். அவர், டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், டாடா பவர், டாடா கல்சல்டன்சி சர்வீஸஸ், டாடா டீ, டாடா கெமிக்கல்ஸ், தி இந்தியன் ஹோட்டல்ஸ் கம்பெனி மற்றும் டாடா டெலிசர்வீசஸ் ஆகிய பெரும் டாடா நிறுவனங்களுக்கும் தலைவராக பொறுப்பேற்று உள்ளார்.

விருதுகள்: பத்ம பூஷண் விருது (2000), ஹாங்க்ஜோவ் நகரத்தின் பொருளாதார ஆலோசகர் பட்டம்(2004),2006 ஆம் ஆண்டில், பொறுப்புடைய முதலாளித்துவத்திற்கான முதல் விருது,பொருளாதாரக் கல்விக்காக ராபர்ட் எஸ். ஹாட்பீல்ட் பெல்லோ விருதினை வழங்கி, கார்நெல் பல்கலைக்கழகம் டாடாவை கௌரவித்தது,2008 ஆம் ஆண்டிற்கான NASSCOM உலகத் தலைமை விருதுகள் பெற்றவர்களில் இவரும் ஒருவர், இரண்டாவது பெரிய சிறப்புப் பதக்கமான பத்ம விபூஷண் விருது(2008),ஒகைய்யோ மாநிலப் பல்கலைக்கழகம் வழங்கிய வணிக மேலாண்மைக்கான கௌரவ முனைவர் பட்டம்; பாங்காக்கில் உள்ள ஆசிய தொழில்நுட்ப நிறுவனம் வழங்கிய தொழில்நுட்பத்திற்கான கௌரவ முனைவர் பட்டம்; வாரிக் பல்கலைக்கழகம் வழங்கிய அறிவியலுக்கான கௌரவ முனைவர் பட்டம்; மற்றும் லண்டன் ஸ்கூல் ஒப் எகொநோமிக்ஸ் வழங்கிய கௌரவ பெல்லோஷிப் ஆகியவை அவர் பெற்ற பிற விருதுகளாகும்.

images?q=tbn:ANd9GcQ6t8UEt-0liMsz7d9utQrnnxH9W8n_7HbiPdKRUmffJQsOam8&t=1&usg=__7vG7AYudyGep2QkARzufEfNT8FA=

இரவீந்தரநாத் தாகூர்

இரவீந்தரநாத் தாகூர் புகழ் பெற்ற வங்காள மொழிக் கவிஞர் ஆவார். கீதாஞ்சலி என்ற கவிதை நூலுக்காக இவர் 1913-ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றார். நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர் இவரே ஆவார். இந்தியாவின் தேசியகீதமான ஜன கண மன பாடலை இயற்றியவர். மக்கள் இவரை அன்புடன் குருதேவ் என்று அழைத்தனர். இவருடைய மற்றொரு பாடல் அமர் சோனார் பங்களா வங்காளதேசத்தின் தேசிய கீதமாக பிரபலம் அடைந்தது.

விருதுகள்: நோபல் பரிசு (1913)

  200px-Tagore3.jpg

சச்சின் ரமேஷ் டெண்டுல்கர்

சச்சின் ரமேஷ் டெண்டுல்கர் தலைசிறந்த இந்திய கிரிக்கெட் ஆட்டக்காரர் ஆவார். தனது 16ஆவது வயதில் பாக்கிஸ்தான் அணிக்கு எதிராக 1989இல் முதன்முதலாக அனைத்துலக துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார். டெஸ்ட் போட்டிகளிலும் ஒரு நாள் அனைத்துலகப் போட்டிகளிலும் அதிக ஓட்டங்களை எடுத்த வீரர் இவரே; வரையறுக்கப்பட்ட ஓவர் அனைத்துலகப் போட்டிகளில் (LOI) அதிகபட்சமாக இரட்டைச்சதம் (200* ஓட்டங்கள்) எடுத்தவர் என்ற பெருமையும் டெண்டுல்கரைச் சேரும். இதுவரை கிரிக்கெட் விளையாடிய அனைத்து மட்டையாளர்களிலும் டெஸ்ட் போட்டிகளில் பிராட்மனுக்கு அடுத்த நிலையில் உள்ளவராகவும் ஒரு நாள் அனைத்துலகப் போட்டிகளில் ரிச்சர்டுசுக்கு அடுத்த நிலையில் உள்ளவராகவும் 2002 -இல் விசுடன் குழுமம் வெளியிட்ட தர வரிசை அறிவிக்கின்றது 

விருதுகள்:  அர்ஜூனா விருது(1994),1997-98 ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது,1997-விஸ்டனின் மிகச் சிறந்த வீரர் விருது,1999-பத்மஷ்ரீ விருது,2008-பத்மவிபூஷன் விருது.

  images?q=tbn:ANd9GcR7CTBN7wKBsG_W_FkGEe5nf51zJcwrzkgvoAClGP7_ZNth9k8&t=1&usg=__P-pvElHfu_tfGy4EsmNGI-kjk84=

சர்தார் வல்லப்பாய் படேல்

சர்தார் வல்லப்பாய் படேல் இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். குஜராத் மாநிலத்தில் பிறந்து வளந்த படேல் குஜராத் மாநிலத்தில் வழக்கறிஞராக இருந்து பிரித்தானியர்களுக்கு எதிர் அறவழி போராட்டங்களை நடத்தினார். இந்திய தேசிய காங்கிரஸ்இல் ஒரு தலைவராக இருந்து வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் ஒரு முக்கியமானவராக இருந்தார். இவர் இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்பட்டார்.

images?q=tbn:ANd9GcQKrAExWdIY-zHUXDlDbp_F2eK_sIAbQufzwnyM_sP7FsUYjdU&t=1&usg=__L1T3nrzUxXjIHXi2GAQzQ6OfkrA=  

சரோஜினி நாயுடு

சரோஜினி நாயுடு அல்லது சரோஜினி சட்டோபத்யாயா அவர்கள் பாரதிய கோகிலா (இந்தியாவின் நைட்டிங்கேல்) என்றும் அழைக்கப்படுவார்கள். இவர் ஒரு பிரபலமான குழந்தை ஞானி, சுதந்திர போராளி மற்றும் கவிஞர் ஆவார். இந்திய தேசிய காங்கிரசின் முதல் பெண் தலைவரும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல் பெண் ஆளுனரும் ஆவார். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மகாத்மா காந்தியுடன் இணைந்து தண்டி யாத்திரையில் ஈடுபட்டார்

images?q=tbn:ANd9GcT2Ufjd67QxlGAXvL7Dlu1kpqlNjPTkQ72A_xwSb5U-BS_t0Ng&t=1&usg=__6H7ALT8jPxG-TZI0DjP--NjaFmc=

நேதாஜி சுபாஷ்  சந்திர  போஸ்

நேதாஜி என்று இந்திய மக்களால் மரியாதையுடன் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவராவார். இரண்டாம் உலகப் போர் சமயத்தில் வெளிநாடுகளில் போர்க் கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி அப்போது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயர்க்கு எதிராக தாக்குதல் நடத்தியவர்.

இவர் 1945 ஆகஸ்ட் 18 அன்று தைவான் நாட்டில் ஒரு விமான விபத்தில் இறந்து விட்டதாக கருதப்பட்டாலும், அவர் அப்போது இறக்கவில்லை என்பதற்கு பல சான்றுகள் உள்ளன.

images?q=tbn:ANd9GcTzJA2ls7SiJp1rIqW5VUECWiR_GfcQanH98VaSB1gdOw5jpCg&t=1&usg=__VJ9GYvq63pz-eLOyL5zMI_biCBE=

சுனிதா  வில்லியம்ஸ் 

சுனிதா வில்லியம்ஸ்ஒரு அமெரிக்க விண்வெளி வீராங்கனையும் கப்பல்படை அதிகாரியும் ஆவார். இவர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 14ம் விண்வெளிப் பயணத்திற்கு உறுப்பினராக்கப்பட்டார், பின் அவர் 15ம் விண்வெளி பயணத்தில் இணைந்தார். விண்வெளியில் பயணம் செய்த பெண்களில் அதிக நேரம் விண்வெளியில் பயணம் செய்த சாதனையை (195 நாட்கள்) அவர் கொண்டிருக்கிறார்.

விருதுகள்: நேவி கமென்டேஷன் விருது (இருமுறை),நேவி மற்றும் மரைன் கார்ப்ஸ் சாதனை விருது,மனிதாபிமான சேவை விருது.

images?q=tbn:ANd9GcSvMPdk8DywqMW3yuDE3R6OWD12x9wV6qomph0FVJsf89b52QU&t=1&usg=__nb0lMMDoQYlOA_UUVYrtBQznMTk=

விக்ரம் சாராபாய் 

விக்கிரம் அம்பாலால் சாராபாய் இந்திய இயற்பியலாளர். இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை எனக் கருதப்படுகிறார்.இந்தியாவின் முதல் செயற்கைக்கோளான ஆரியபட்டாவின் விண்ணேவுதலுக்கு முழுமுதல் காரணமானவர் விகிரம். SITE எனப்படும் ‘செயற்கைக்கோள் உதவியுடன் தொலைக்காட்சியில் பயிற்றுவிக்கும் முயற்சி’ மூலம் 2,400 இந்திய கிராமங்களிலுள்ள 50 லட்சம் மக்களுக்கு கல்வியை எடுத்துச்செல்ல உதவினார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தை(ISRO) விரிவாக்கினார்.

விருதுகள்: பத்ம பூசண் & பத்ம விபூசண்

images?q=tbn:ANd9GcReF1KrrsPyZdi7Hef96yVZkgu2eSAQfwGCJVSbHjWvzjes53M&t=1&usg=__jDpWFyi1FzxHg7AmpeDsRJSzoA4=

விஸ்வநாதன் ஆனந்த்

விஸ்வநாதன் ஆனந்த் இந்திய சதுரங்க (செஸ்) கிராண்ட் மாஸ்டர் மற்றும் தற்போதைய உலக-சதுரங்க வெற்றிவீரரும் ஆவார். FIDE ELO மதிப்பீட்டின் படி தற்போது ஆனந்த் 2789 புள்ளிகள் பெற்று நான்காம் இடத்தில் உள்ளார். உலக சதுரங்க வரலாற்றில் பீடே தரப்பட்டியலில் 2800 புள்ளிகளைத் தாண்டிய ஐவருள் ஆனந்தும் ஒருவர் (ஏப்ரல் 2006, ஏப்ரல் 2008). இவர் 1994 இலிருந்து முன்னணி வகிக்கும் மூவரில் ஒருவராக விளங்குகின்றார்.அக்டோபர் 2003 இல் FIDE ஊடாக அதிவேக சதுரங்க வெற்றிவீரர் பட்டத்தை வென்றார்.

images?q=tbn:ANd9GcSm5HqGhS1utg06AfXG6gDhetiWkMhXdMJ6r-CkZjwc8s05u0Y&t=1&usg=__Tep0AATrvRhdErgnbfrL7QO5uMM=

விருதுகள்: அர்ஜுனா விருது (1985), பத்ம ஸ்ரீ விருது(1987),ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது( 1991-1992),பிரித்தானிய சதுரங்க கூட்டமைப்பின் Book of the year விருது (1998),பத்மபூஷண்சதுரங்க ஆஸ்கார் - (1997, 1998, 2003, 2004, 2007, 2008),பத்ம விபூசன் (2007).

சுவாமி விவேகானந்தர்

சுவாமி விவேகானந்தர்  பத்தொன்பதாம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த சமயத் தலைவர்களுள் ஒருவராவார். இவரது இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா . இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான இவரின் கருத்துக்கள் இளைஞர்களை எழுச்சியடையச் செய்வனவாக அமைந்துள்ளன. இவர் இந்தியாவிலும் மேலைநாடுகளிலும் அத்வைத வேதாந்த தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட பல சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார். 1893 ஆம் ஆண்டு அவர் சிகாகோவில் உலகச் சமயங்களின் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய சொற்பொழிவுகள் உலகப்புகழ் பெற்றது.

images?q=tbn:ANd9GcQ0X-uP21DjVAOINoOfWToEoVsbqV4PmP9mL_ECnurC7DLkPQI&t=1&usg=__YwBIxY67HL3viqlUcJmT9z1R61A=

No comments: